ஆப்நகரம்

திருப்பைஞ்ஞீலியில் வைகாசி பூஜை

கல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில், சோம வாரம் மற்றும் வைகாசி நிறைவு ஆராதனைகள் நடைபெற்றன.

TOI Contributor 13 Jun 2016, 4:57 pm
கல்யாண வரம் தரும் திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில், சோம வாரம் மற்றும் வைகாசி நிறைவு ஆராதனைகள் நடைபெற்றன.
Samayam Tamil thiruppainjeeli siva temple vaikasi pooja
திருப்பைஞ்ஞீலியில் வைகாசி பூஜை


திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது மண்ணச்சநல்லூர். இங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பைஞ்ஞீலி.

ஒருகாலத்தில் ஞீலி வனமாகத் திகழ்ந்த பூமி இது. ஞீலி என்றால் வாழை. பைஞ்ஞீலி என்றால் பசுமையான வாழை. வாழைத் தோப்பாக இருந்த இடத்தில் சிவனார் குடிகொண்டிருப்பதால், ஈசனுக்கு ஸ்ரீஞீலிவனநாதர் எனத் திருநாமம் அமைந்தது.

இங்கே, வாழை மரமே ஸ்தல விருட்சம். இங்கு, வாழைக்கு தாலி கட்டி, பரிகாரம் செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்! தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கல்யாண வரம், நீண்ட ஆயுள் ஆகியவற்றை வழங்கி, எம பயத்தையும் போக்கி அருள்கிறார் ஸ்ரீஞீலிவனநாதர். அம்பாள் : ஸ்ரீநீள்நெடுங்கண்ணி. அதாவது ஸ்ரீவிசாலாட்சி அம்பாள்.

கல்யாணத் தடை, களத்திர ஸ்தானத்தில் தோஷம் என்று எதுவாக இருந்தாலும் திருப்பைஞ்ஞீலி தலத்துக்கு வந்து, பரிகாரங்களைச் செய்து சிவனாரை வேண்டிக் கொண்டால், விரைவில் கல்யாண வரம் கிடைக்கப் பெறலாம்!

அற்புதமான இந்தத் தலத்தில், சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையை முன்னிட்டும் வைகாசி மாதத்தின் நிறைவையொட்டியும் இன்று சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றன. சிவனாருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்!

மகாவிஷ்ணு, இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயுபகவான், அக்னி பகவான், சூதமாமுனிவர் முதலானோர் இந்தத் தலத்தில் வழிபட்டு, சிவனருள் பெற்ற இந்தத் தலத்தில் சிவ தரிசனம் செய்தால், ஞானமும் யோகமும் பெறலாம் என்கின்றனர் பக்தர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்