திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாச்சலீஸ்வரர் கோவிலில் கடந்த 3ம் தேதி கார்த்திகை தீபம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி விநாயகர், சண்டீகேஸ்வரர், முருகன் ஆகியோர் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். கடந்த 8ம் தேதி வெள்ளித்தேரோட்டம் நடந்தது. இதில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்தனர்.
10ம் நாளான இன்று, அதிகாலையில் அர்த்த மண்டத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனையொட்டி பக்தர்கள் அங்கு குவிந்தனர். இதனைத் தொடர்ந்து மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது. இதற்கான தீப கொப்ப்பரைக்கு கடந்த சனிக்கிழமையன்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இதன் பிறகு 12 பேர் அடங்கிய குழு மலை உச்சிக்கு தீப கொப்பரையை சுமந்து கொண்டு சென்றனர். இந்த ஆண்டு தூய செப்பினால் 200 கிலோ எடையுடன் கூடிய 5 அடி உயரம் கொண்ட தீப கொப்பரை உருவாக்கப்பட்டுள்ளது.
மகா தீபம் ஏற்றப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் கொடி மரத்தின் முன்பு காட்சியளிப்பார். இதற்காக ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருவண்ணாமலை அருணாச்சலீஸ்வரர் கோவிலில் கடந்த 3ம் தேதி கார்த்திகை தீபம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி விநாயகர், சண்டீகேஸ்வரர், முருகன் ஆகியோர் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். கடந்த 8ம் தேதி வெள்ளித்தேரோட்டம் நடந்தது. இதில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்தனர்.
10ம் நாளான இன்று, அதிகாலையில் அர்த்த மண்டத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனையொட்டி பக்தர்கள் அங்கு குவிந்தனர். இதனைத் தொடர்ந்து மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது. இதற்கான தீப கொப்ப்பரைக்கு கடந்த சனிக்கிழமையன்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இதன் பிறகு 12 பேர் அடங்கிய குழு மலை உச்சிக்கு தீப கொப்பரையை சுமந்து கொண்டு சென்றனர். இந்த ஆண்டு தூய செப்பினால் 200 கிலோ எடையுடன் கூடிய 5 அடி உயரம் கொண்ட தீப கொப்பரை உருவாக்கப்பட்டுள்ளது.
மகா தீபம் ஏற்றப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் கொடி மரத்தின் முன்பு காட்சியளிப்பார். இதற்காக ஏராளமான பக்தர்கள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.