ஆப்நகரம்

பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்!

உலகப்புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தியாகேசா முழக்கங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

Samayam Tamil 27 May 2018, 10:55 am
உலகப்புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தியாகேசா முழக்கங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
Samayam Tamil foot_slide
பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் கோலாகலம்!


சைவ ஸ்தலங்களின் தலைமை பீடமாக விளங்கும் திருவாரூர்தியாராஜர்கோயிலின் ஆழித்தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடிக்க கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகப் பிரசித்திப் பெற்றதும் பிரமாண்டமானதும் தமிழகத்தில் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கோவில்களில் உள்ள ஆழித்தேர்களில் முதன்மையானது திருவாரூர்தியாகராஜர் கோயில் தேர்.

96 அடி உயரமும், 31 அடி அகலமும், 350 டன் எடைகொண்டது திருவாரூர்ஆழித்தேர். ஆண்டுதோறும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவுக்குப் பிறகு ஆழித்தேரோட்டம் நடப்பது வழக்கம்.

இந்த நிலையில் இந்தாண்டுக்கான திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேரோட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மலா ராஜ் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆயிரகணக்கான பக்தர்கள் தியாகேசா முழக்கங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். உலகப் பிரசித்தி இத்திருவிழாவை காண தமிழகம் முழுவதும் பல இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்துள்ளனர். இதனை முன்னிட்டு அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்