ஆப்நகரம்

தமிழகத்தின் துஷ்ட சக்திகளை விரட்டுவது தான் சிவன்மலை முருகனின் உத்தரவு

சிவன்லை முருகன் கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வலம் புரி சங்கு வைக்கப்பட்டுள்ளது. இது பெருமாள் தன் கையில் வைத்திருக்கும் பொருட்களில் ஒன்று என்பதும், வலம்புரி சங்கு நன்மைகள் பல பயக்கும் என்பதால் தமிழ்க மக்களுக்கு விடிவு காலம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

TOI Contributor 22 Apr 2017, 4:29 pm
திருப்பூர் : சிவன்லை முருகன் கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வலம் புரி சங்கு வைக்கப்பட்டுள்ளது. இது பெருமாள் தன் கையில் வைத்திருக்கும் பொருட்களில் ஒன்று என்பதும், வலம்புரி சங்கு நன்மைகள் பல பயக்கும் என்பதால் தமிழ்க மக்களுக்கு விடிவு காலம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil this month valamburi sangu kept tiruppurs traditional sivan malai temple box
தமிழகத்தின் துஷ்ட சக்திகளை விரட்டுவது தான் சிவன்மலை முருகனின் உத்தரவு


திருப்பூரில் உள்ள சிவன்மலை முருகன் கோயிலின் ஆண்டவன், ஒரு குறிப்பிட்ட காலத்தில், அவ்வூர் மக்களின் கனவில் தோன்றி, ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கும் பொருளை கூறுவார். அப்படி கனவில் தோன்றும் நபர் அந்த பொருளை கொண்டு வந்து அந்த பெட்டியில் வைப்பது வழக்கம்.

தண்ணீர்:
இதற்கு முன் ஆண்டவன் அப்படி கனவில் தோன்றி ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இதற்கு முன்பு ஆற்று மணல், தண்ணீர், தங்கம், ரூபாய் நோட்டு, ஏர்கலப்பை, துப்பாக்கி, உப்பு, இரும்பு சங்கிலி உள்பட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் வைக்கப்பட்ட போதுதான் சுனாமி வந்ததாம்.

வலம்புரி சங்கு :
இந்த வகையில் தற்போது வலம்புரி சங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது என்ன விபரீதம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் சிலர் புலம்புகின்றனர். அதே வேளையில், பெருமாள் தன் கையில் வைத்திருக்கும் சங்கு மிகவும் சக்தி வாய்ந்தது. முன்பெல்லாம் வீட்டில் வாசலை தாண்டியதும், ஒரு சங்கின் மேல் பகுதிமட்டும் தெரியும் வண்ணம் வைத்திருப்பர்.



இதற்கு காரணம் வலம்புரிச்சங்கு பதிப்பதன் மூலம் வீட்டினுள் பாதிப்பை தரக்கூடிய சில அதிர்வலைகள் (துஷ்டசக்திகள்/கண்படுதல்) நுழையாமல் தடுத்து நிறுத்தபடுவதுதான்.
இந்த வகையில் தற்போது வலம்புரி சங்கு வந்துள்ளது, தமிழகத்திற்கான துஷ்ட சக்தியை ஒழிக்கத்தான் என்ற பொருளும் கொள்ளப்படுகிறது.



சங்கிலி:
முன்பு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் சங்கிலி வந்த போது தான் சசிகலா ஜெயிலுக்கு போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்