ஆப்நகரம்

​ திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட்டம்

திருப்பதியில் ஏழுமலையான் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதில் இன்று காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்

TNN 1 Oct 2017, 10:43 pm
திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையான் பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதில் இன்று காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
Samayam Tamil thousands of people took holy on the last day of tirupati bramotsavam festival
​ திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட்டம்


கடந்த மாதம் 23ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இதனையடுத்து, தினமும் காலையிலும், மாலையிலும் உற்சவ மூர்த்திகள் 4 மாட வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இந்த விழாவில் கருட சேவை, தேர் திருவிழா, சக்கர ஸ்நானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைக் காண பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற்ற பிரம்மோற்சவ விழாவில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கா வண்ணம் போலீஸ் மற்றும் தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். அதுமட்டுமின்றி பக்தர்கள் அனைவருக்கும் இலவச உணவு, குடிநீர், போக்குவரத்து, தங்குமிடம் போன்ற வசதிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

நிறைவு நாளான இன்று காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு, தலைமை பாதுகாப்பு அதிகாரி ரவிகிருஷ்ணா, பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோர் கலந்து கொண்டனர். மாலையில் நடைபெற்ற கோடி இறக்க நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

Thousands of people took holy on the last day of Tirupati bramotsavam festival.

அடுத்த செய்தி

டிரெண்டிங்