ஆப்நகரம்

திருச்செந்தூரில் துவங்கியது ஆவணித் திருவிழா!

முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான, திருச்செந்தூர் திருத்தலத்தில், ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

TOI Contributor 22 Aug 2016, 5:31 pm
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான, திருச்செந்தூர் திருத்தலத்தில், ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
Samayam Tamil tiruchendur aavani thiruvizha
திருச்செந்தூரில் துவங்கியது ஆவணித் திருவிழா!


தூத்துக்குடி மாவட்டத்தில், கடலோரத்தில் உள்ள அற்புதமான ஆலயம், திருச்செந்தூர் திருத்தலம். இங்கே உள்ள ஸ்ரீசெந்திலாண்டவர் சுவாமி திருக்கோயில் வருடம் முழுவதும் பல விழாக்களும் விசேஷங்களுமாக நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

இங்கே, இன்று ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு திங்கட்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. இதன் பிறகு 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.

அதையடுத்து இன்று அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டமானது வெள்ளிப் பல்லக்கில் ஒன்பது சந்தி வழியாக கொண்டுவரப்பட்டது. பின்னர், 5.20 மணிக்கு கோயில் பிரகாரத்தில் உள்ள செப்புக்கொடிமரத்தில் கொடியேற்றம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர், கொடிமரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. மகா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம், காஞ்சிபுரம் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் முதலானோர் கலந்து கொண்டார்கள். கொடியேற்றத்தை அடுத்து காலையும் மாலையும் ஒவ்வொரு அலங்காரத்தில், ஒவ்வொரு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா புறப்பாடு நடைபெறும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்