ஆப்நகரம்

திருப்பைஞ்ஞீலியில் அமாவாசை சிறப்பு பூஜை!

கல்யாண வரம் தந்தருளும் திருத்தலம் என்று போற்றப்படுகிறது திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் என மூவராலும் தேவாரம் பாடல்கள் பாடப் பட்ட அற்புதத் திருத்தலம் இது!

TOI Contributor 4 Jul 2016, 2:59 pm
கல்யாண வரம் தந்தருளும் திருத்தலம் என்று போற்றப்படுகிறது திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் என மூவராலும் தேவாரம் பாடல்கள் பாடப் பட்ட அற்புதத் திருத்தலம் இது!
Samayam Tamil tiruchi tirupainsuzhi temple
திருப்பைஞ்ஞீலியில் அமாவாசை சிறப்பு பூஜை!


யமனுக்கு இங்கே சந்நிதி உண்டு. எனவே ஆயுள் பலம் பெருகவும் அறுபது மற்றும் எண்பதாம் கல்யாண வைபவங்கள் செய்து கொள்ளவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து பூஜை மற்றும் சிறப்பு ஹோமங்களைச் செய்து தரிசித்துச் செல்கின்றனர். இங்கே சுவாமியின் திருநாமம் ஸ்ரீஞீலிவனநாதர். ஞீலி என்றால் வாழை என்று பொருள். அம்பாள் , ஸ்ரீவிசாலாட்சி அம்மை.

அப்பர் பெருமான், இங்கு வந்த போது வெயிலினாலும் கடும் பசியினாலும் களைப்புற்று சோர்ந்து போனார். அப்போது அப்பருக்கு அவரது களைப்பு தீர, சிவபெருமானே வந்து, பொதி சோறு எனப்படும் கட்டமுது வழங்கி பசியாற்றினார் என்கிறது ஸ்தல புராணம்.

இங்கு சப்த கன்னியர்கள் கல்வாழையாகத் தோன்றி ஈசனை வழிபடுகிறார்கள். திருப்பைஞ்ஞீலி சென்று கோயிலில் உள்ள கல்வாழைக்கு பரிகாரம் செய்து விட்டு அங்குள்ள எமதர்மராஜருக்கும் ஈசனுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத் தடை, கிரக தோஷங்கள் யாவும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார்.இங்கு கல்வாழை பரிகாரம் செய்தபின் தரப்படும் தேங்காய், பழங்களை பசுவிற்கு தந்தால் இன்னும் சிறப்பான பலன்கள் நிச்சயம் என்பார்கள்.

அற்புதமான இந்தத் தலத்தில், இன்று 4ம் தேதி சோம வார பூஜையும் அமாவாசை சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிவனாரை தரிசித்தால், சகல பாவங்களும் நீங்கும். முன்னோர் ஆசி கிட்டும் என்பது ஐதீகம்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்