ஆப்நகரம்

திருமால் கொடுத்த மன்னிப்பு!

திருமால், வாமன உருவம் கொண்டு மகாபலி சக்கரவர்த்திக்கு முன்னே வந்தார். மூன்றடி நிலம் கேட்டார். மன்னனும் மூன்றடி வழங்க ஒப்புக் கொண்டான்.

TOI Contributor 13 Sep 2016, 5:57 pm
திருமால், வாமன உருவம் கொண்டு மகாபலி சக்கரவர்த்திக்கு முன்னே வந்தார். மூன்றடி நிலம் கேட்டார். மன்னனும் மூன்றடி வழங்க ஒப்புக் கொண்டான்.
Samayam Tamil tirumal gave excuse to whom why
திருமால் கொடுத்த மன்னிப்பு!


உடனே குள்ள வாமனன், விஸ்வரூபம் எடுத்தார். உலகளந்த பெருமாளாக நின்றார். பூமி ஓரடி, வானம் ஓரடி என அளந்தவர், மூன்றாவது அடியை எங்கே வைப்பது. இடமில்லையே என்றார். உடனே தன் சிரசைக் காட்டினான் மன்னன். தன் திருப்பாதத்தை மன்னனின் சிரசில் வைத்தார். அப்படியே பூமிக்குள் சென்றான் மகாபலி. பாதாள லோகம் சென்றான். ஆனால் மகாபலியைக் கொல்லவில்லை திருமால்!

இதற்கு புராணத்தில் காரணம் சொல்லப்படுகிறது. அதாவது விஷ்ணு பக்தியில் திளைத்தவரான பிரகலாதன், மகாபலியின் தாத்தா. பிரகலாதனுக்கு அருளிய திருமால், ‘அசுர குலத்தவர்கள்தான் என்றபோதிலும், என் மீது மாறா பக்தியுடன் என்னை சரணடையும் உங்கள் பக்தியில் மகிழ்ந்தேன். ஆகவே, இனி உன் வம்சத்தில் பிறப்பவர்களை, அவர்கள் அசுர வம்சத்தவர் என்றபோதிலும் அவர்களைக் கொல்லமாட்டேன். உன் வம்சத்தினரை அழிக்கமாட்டேன் என அருளினார் மகாவிஷ்ணு.

அதனால்தான் அசுரக் குலத்தைச் சேர்ந்த பாணாசுரனைக் கொல்லாமல், கைகளைத் துண்டித்து தண்டித்தார். மகாபலியை பாதாளலோகம் அனுப்பினாரே ஒழிய, கொல்லவில்லை!

அடுத்த செய்தி

டிரெண்டிங்