ஆப்நகரம்

திருப்பதியில் களைகட்டும் வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடுகள்!

இந்த வருடம் நடக்க உள்ள வைகுண்ட ஏகாதசி விழாவைக் கொண்டாட திருப்பதி தேவஸ்தானம் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி உள்ளது.

TNN 15 Nov 2017, 11:37 am
திருப்பதி: இந்த வருடம் நடக்க உள்ள வைகுண்ட ஏகாதசி விழாவைக் கொண்டாட திருப்பதி தேவஸ்தானம் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி உள்ளது.
Samayam Tamil tirupathi tirumala devasthana has started the pre arrangement works for the vaikuntha ekadhasi
திருப்பதியில் களைகட்டும் வைகுண்ட ஏகாதசி முன்னேற்பாடுகள்!


ஆண்டுதோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வைகுண்ட ஏகாதசியின் போது திருப்பதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி, பக்தர்கள் வரும் தடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், பக்தர்கள் சுவாமி தரிசனத்தை அதிகம் பார்க்கும்படி, விஐபி தரிசனங்கள் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் வைகுண்ட ஏகாதசியை காண 1 லட்சம் பக்தர்கள் வரை திருப்பதி மலைக்கு வருவார்கள் என்று கருதப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்