ஆப்நகரம்

திருவண்ணாமலையில் சோம வார பிரதோஷம்!

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

TOI Contributor 30 Aug 2016, 6:03 pm
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Samayam Tamil tiruvannamalai soma vara piradhosam
திருவண்ணாமலையில் சோம வார பிரதோஷம்!


நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை திருத்தலத்தில், அருணாசலேஸ்வரர் கோயிலில், ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, மூலவர் சந்நிதி எதிரே உள்ள நந்தி, தங்கக் கொடிமரம் எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்திகளுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பால், பழம், தயிர், பன்னீர் உள்பட ஏராளமான பூஜை பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர், கோயில் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்