வழிபாடுகளில், சாக்த வழிபாடு எனப்படும் சக்தி வழிபாடு மிகவும் உன்னதமானது. சக்தி என்பது தேவியைக் குறிக்கும். தேவி உபாஸனை செய்து, அன்னையை ஆராதித்தால், முகத்திலும் மனத்திலும் தேஜஸ் பரவும். தீய சக்திகள் அண்டாது. நல்லன நல்லாம் தேடி வரும் என்பது ஐதீகம்.
சக்தி வழிபாட்டில், சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீவராஹியை வழிபடுவது, அதீத பலன்களைக் கொடுக்கவல்லது என்பார்கள் இவளை எவரொருவர் மனதார வணங்கி வழிபடுகிறார்களோ, அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் அரண் போல் இருந்து காத்தருள்வாள் ஸ்ரீவராஹிதேவி என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
ஸ்ரீவராஹிதேவியை வழிபடுவதற்கு பஞ்சமி திதி மிகச் சிறந்தநாள். ‘பஞ்சமி பஞ்ச பூதேஷி பஞ்ச பஞ்சோப சாரிணி’ என்று ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில், பஞ்சமி திதியின் பெருமையையும் அப்போது வழிபடுவதையும் அதனால் கிடைக்கும் பலன்களையும் பார்க்கலாம் என்கிறார் சென்னை நங்கநல்லூர் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலின், பாலாஜி வாத்தியார்.
இன்று 6ம் தேதி, வியாழக் கிழமை, பஞ்சமி திதி. இந்த அற்புதமான நாளில் ஸ்ரீவராஹியை வணங்குவதும் ஆராதிப்பதும் உன்னதமான பல பலன்களை, சத்தான பாக்கியங்களை, சந்தான பாக்கியங்களை வழங்கும் என்பது உறுதி!
அதுமட்டுமா? புரட்டாசி புண்ய காலத்தில், சக்தி உகந்த நவராத்திரி தருணத்தில், பஞ்சமி திதியில், ஸ்ரீவராஹிதேவியை தரிசிப்போம். அன்னையின் அருட்கடாட்ஷத்தைப் பெறுவோம்.
பஞ்சமி திதியில், ஸ்ரீவராஹிதேவியை பஞ்ச ஆராதனைகள் செய்து வழிபடுவது பத்து மடங்கு கூடுதல் பலன்களைத் தரும் என்கிறது சாஸ்திரம். அதாவது, தூப ஆராதனை, தீப ஆராதனை, மந்திர ஆராதனை, புஷ்ப ஆராதனை மற்றும் நைவேத்திய ஆராதனை என பஞ்ச ஆராதனைகளால் பஞ்சமி திதியின் நாயகியை, இன்று வணங்குவோம். வளமுடன் நலமுடன் பலமுடன் உரமுடன் நிம்மதியாய் வாழ்வோம்!
சக்தி வழிபாட்டில், சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீவராஹியை வழிபடுவது, அதீத பலன்களைக் கொடுக்கவல்லது என்பார்கள் இவளை எவரொருவர் மனதார வணங்கி வழிபடுகிறார்களோ, அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் அரண் போல் இருந்து காத்தருள்வாள் ஸ்ரீவராஹிதேவி என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
ஸ்ரீவராஹிதேவியை வழிபடுவதற்கு பஞ்சமி திதி மிகச் சிறந்தநாள். ‘பஞ்சமி பஞ்ச பூதேஷி பஞ்ச பஞ்சோப சாரிணி’ என்று ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில், பஞ்சமி திதியின் பெருமையையும் அப்போது வழிபடுவதையும் அதனால் கிடைக்கும் பலன்களையும் பார்க்கலாம் என்கிறார் சென்னை நங்கநல்லூர் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலின், பாலாஜி வாத்தியார்.
இன்று 6ம் தேதி, வியாழக் கிழமை, பஞ்சமி திதி. இந்த அற்புதமான நாளில் ஸ்ரீவராஹியை வணங்குவதும் ஆராதிப்பதும் உன்னதமான பல பலன்களை, சத்தான பாக்கியங்களை, சந்தான பாக்கியங்களை வழங்கும் என்பது உறுதி!
அதுமட்டுமா? புரட்டாசி புண்ய காலத்தில், சக்தி உகந்த நவராத்திரி தருணத்தில், பஞ்சமி திதியில், ஸ்ரீவராஹிதேவியை தரிசிப்போம். அன்னையின் அருட்கடாட்ஷத்தைப் பெறுவோம்.
பஞ்சமி திதியில், ஸ்ரீவராஹிதேவியை பஞ்ச ஆராதனைகள் செய்து வழிபடுவது பத்து மடங்கு கூடுதல் பலன்களைத் தரும் என்கிறது சாஸ்திரம். அதாவது, தூப ஆராதனை, தீப ஆராதனை, மந்திர ஆராதனை, புஷ்ப ஆராதனை மற்றும் நைவேத்திய ஆராதனை என பஞ்ச ஆராதனைகளால் பஞ்சமி திதியின் நாயகியை, இன்று வணங்குவோம். வளமுடன் நலமுடன் பலமுடன் உரமுடன் நிம்மதியாய் வாழ்வோம்!