ஆப்நகரம்

ஏழுமலையானை தரிசிக்க இனி ஆதார் அட்டை அவசியம்

இம்மாதம் 15ம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்பவர்கள் கையில் ஆதார் அட்டை எடுத்துச் சென்றாதல்தான் தரிசிக்க முடியும்.

TOI Contributor 1 Apr 2016, 12:01 pm
இம்மாதம் 15ம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்பவர்கள் கையில் ஆதார் அட்டை எடுத்துச் சென்றாதல்தான் தரிசிக்க முடியும்.
Samayam Tamil to visit thirumala need aathar card
ஏழுமலையானை தரிசிக்க இனி ஆதார் அட்டை அவசியம்


திருப்பது ஏழுமலையான் கோவிலுக்கு வழக்கம் போல் இந்த ஆண்டும் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி திருப்பதியில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பொதுவாக இந்த கோடை காலத்தில் தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்படுவதால் அதிகளவில் பக்தர்கள் திருப்பதி, திருச்சானூர் ஆகிய கோவில்களுக்கு வருவது வழக்கம்.

எனவே திருப்பதியில் பக்தர்கள் அனைவரும் ஏழுமலையானை எந்த இடஞ்சல் இன்றி தரிசனம் செய்ய ஆதார் அட்டை முறையை கோயில் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. 50 ரூபாய் கட்டணம், 300 ரூபாய கட்டணம் மற்றும் அறைகளில் தங்குவதற்கு எதுவாக இருந்தாலும் ஆதார் அட்டை காண்பித்தால்தான் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை பொருந்தும் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்பசிவராவ் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்