ஆப்நகரம்

நாளை சங்கடங்களை போக்கும் மகா சங்கடஹரசதுர்த்தி!!

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

TNN 13 Feb 2017, 10:51 pm
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.
Samayam Tamil tomorrow maha sankatahara chaturthi
நாளை சங்கடங்களை போக்கும் மகா சங்கடஹரசதுர்த்தி!!


நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய்க்கு, விநாயகரை வழிபடும் முறைகளை பரத்வாஜ் முனிவர் சொல்லிக் கொடுத்தார். அதன்படி செவ்வாய், விநாயகரை நோக்கி கடும் தவம் இருந்தார். பக்திக்கு மகிழ்ந்த விநாயகர் அவர் முன் தோன்றி, செவ்வாய் நவக்கிரகங்களில் ஒன்றாக விளங்கும் வரம் கொடுத்தார்.

இந்த விரதம் செவ்வாய்க்கிழமையன்று சதுர்த்தி திதியில் நடந்ததால், செவ்வாய்க்கிழமையும், சதுர்த்தி திதியும் சேர்ந்து வரும் நாளில் இவரை பூஜித்து விரதம் இருப்பவருக்கு கேட்கும் வரங்களை செவ்வாய் கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் சதுர்த்தி திதியும், செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து வரும் நாளை மகா சங்கடஹரசதுர்த்தி என்று மக்கள் வழிபடுவார்கள்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை 'மகா சங்கடஹர சதுர்த்தி' என்று அழைக்கின்றனர்.

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால், நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள் என்பன உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை அடைய முடியும்.
Tomorrow Maha Sankatahara Chaturthi

அடுத்த செய்தி

டிரெண்டிங்