ஆப்நகரம்

அண்ணன்பெருமாள் கோயிலில் நாளை ஸம்ப்ரோக்ஷணம்

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெள்ளக்குளம் என்றழைக்கப்படும் அண்ணன்பெருமாள் கோயில் அமைந்து உள்ளது. இங்கே அலர்மேல் மங்கை ஸமேத ஸ்ரீநிவாஸப்பெருமாள் கோயில் அழகு ததும்ப அமைந்திருக்கும் ஒப்பற்ற ஆலயம்!

TOI Contributor 7 Jun 2016, 5:31 pm
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெள்ளக்குளம் என்றழைக்கப்படும் அண்ணன்பெருமாள் கோயில் அமைந்து உள்ளது. இங்கே அலர்மேல் மங்கை ஸமேத ஸ்ரீநிவாஸப்பெருமாள் கோயில் அழகு ததும்ப அமைந்திருக்கும் ஒப்பற்ற ஆலயம்!
Samayam Tamil tomorrow special pooja for annan perumal temple
அண்ணன்பெருமாள் கோயிலில் நாளை ஸம்ப்ரோக்ஷணம்


திருப்பதி பெருமாளுக்கே இந்தப் பெருமாள் அண்ணனாம். எனவே இவரை அண்ணன்பெருமாள் என்றே அழைக்கின்றனர் பக்தர்கள். 108 வைணவத் திவ்யதேசங்களுள் இந்தத் தலமும் ஒன்று. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட அற்புதமான புண்ணிய க்ஷேத்திரம் இது!

இந்த தலத்தில்தான் ஞான ஸ்வரூபியான குமுதவல்லி நாச்சியார் அவதரித்தார். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நாளை 8 ம் தேதி புதன் கிழமை, தேதி மஹாஸம்ப்ரோக்ஷணம் விமரிசையாக நடைபெறுகிறது.

அதனை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சர்வசாதகம் பார்த்தன்பள்ளி சேஷாத்திரி பட்டாச்சார்யர் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டாச்சார்யர்கள் யாக சாலை பூஜைகளை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து நாளை 8ம் தேதி காலை யாகசாலை பூஜைகள் முடிந்து 6:30 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் மிதுன லக்னத்தில் மஹா ஸம்ப்ரோக்ஷ்ணம் நடைபெறுகிறது.

மஹா ஸம்ப்ரோக்ஷ்ணத்தில் கலந்துகொள்வதற்காக இந்த கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், சீர்காழி மற்றும் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்தவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்