ஆப்நகரம்

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு!

தைப்பூச ஜோதி தரிசனத்தை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர்.

Samayam Tamil 1 Feb 2018, 11:20 am
வடலூர்: தைப்பூச ஜோதி தரிசனத்தை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர்.
Samayam Tamil vadalur vallalar jyothi darshan happened today
வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்; பக்தர்கள் வழிபாடு!


கடலூர் மாவட்டத்தில் பிறந்த வள்ளலார், சிறுவயது முதலே இறை நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் இறைவனை வேண்டி பாடிய பாடல்கள் ‘திருவருட்பா’ என்று அழைக்கப்படுகிறது.

’கடவுள் ஒருவரே - இறைவன் ஒளி வடிவானவன்’ என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், 1867ல் வடலூரில் சத்திய ஞான சபையை வள்ளலார் நிறுவினார்.

இது எண் கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே சதுர வடிவ பீடத்தின் மேல் வள்ளலார் ஏற்றி வைத்த அணையா தீபமும், அதன் பின்னே பிரம்மாண்ட கண்ணாடியும் உள்ளன.

இதை மறைக்கும் வண்ணம் ஏழு திரைச்சீலைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. இவற்றை விலக்கி, கண்ணாடியில் தெரியும் தீபத்தை தரிசிப்பதே ‘ஜோதி தரிசனம்’ என்று அழைக்கப்படுகிறது.

இதனை 1872ஆம் ஆண்டு, தைப்பூசத்தன்று சத்திய ஞான சபையில் வள்ளலார் தொடங்கி வைத்தார். இது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தைப்பூச திருநாளை ஒட்டி, இன்று காலை 6 மணி, 10 மணி ஆகிய நேரங்களில் ஜோதி தரிசனம் நிகழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, நாளை(பிப்ரவரி 1) காலை 5.30 மணி ஆகிய நேரங்கள் நடைபெறுகிறது.

தைப்பூச விழாவை ஒட்டி, வடலூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நன்னாளில் ‘உயிர்களிடம் அன்பு செய்! பசி போக்கு! தயவு காட்டு! எந்த உயிருக்கும் மனதாலும் தீங்கு நினைக்காதே! ஆகிய வள்ளலாரின் உயர்ந்த நோக்கங்கள் உலகுக்கு உணர்த்தப்படுகின்றன.

Vadalur Vallalar Jyothi darshan happened today.

அடுத்த செய்தி

டிரெண்டிங்