ஆப்நகரம்

வைகாசி மாதத்தில் பிறந்தவரா நீங்கள்..?

வைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

TNN 17 May 2017, 4:57 pm
ஆயுள், செல்வம், புத்திரப்பேறு போன்ற அனைத்தையும் அளிக்கக் கூடிய மாதம் வைகாசி என்பதால் வைகாசி மாதம் நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மாதமாக கருதப்படுகிறது. எனவே இவ்வளவு சிறப்பு மிகுந்த வைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
Samayam Tamil vaikasi born has unique personality by nature
வைகாசி மாதத்தில் பிறந்தவரா நீங்கள்..?


வைகாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஞாபகசக்தி அதிகமாக இருக்கும். இவர்கள் யோசனைகள் செய்வதில் சிறந்தவர்கள். இவர்களின் பலம் பொறுமை தான்.

மேலும் இவர்கள் இடம், பொருள், ஏவல் பார்த்து பேசுவதில் வல்லமை மிக்கவர்கள். இவர்களுக்கு இயற்கையிலேயே வசீகரத் தோற்றம், வாசனை திரவியங்கள் மீது பற்றுதல், உயர்தர ஆடை, ஆபரணங்கள் அணிவதில் பிரியம் இருக்கும்.

இவர்கள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அடி முதல் நுனி வரை தெரிந்து வைத்திருப்பார்கள். வருத்தம், கோபம் எதுவாக இருந்தாலும் அதை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத குணத்தை கொண்டவர்கள். இவர்கள் கையில் எப்பொழுதும் பணம் புரண்டு கொண்டே இருக்கும். சுய தேவைக்கும், ஆசைக்கும் பணம் செலவழிக்க தயங்க மாட்டார்கள்.

உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் அடிக்கடி உண்டாகும். ரத்த சம்பந்தமான குறைபாடுகள் இருக்கும். சைனஸ், தும்மல், ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட நேரிடும். முதுமையில் மறதி நோய், நரம்புத் தளர்ச்சி பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

பயணங்களில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். பக்தி சுற்றுலாக்கள், புனித ஸ்தலங்களுக்கு செல்வது மிகவும் பிடிக்கும். உல்லாசப் பயணங்களிலும் விருப்பம் உடையவர்கள். தனிமையை விரும்புவர்கள், இயற்கை கலையை, அழகை ஆராதிப்பவர்கள். பயண அனுபவங்களை ரசனையுடன் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

நல்ல ஆற்றலும், நிர்வாகத் திறமையும் உள்ள பெண் அல்லது ஆண் இவ்ரகளுக்கு வாழ்க்கைத் துணையாக அமைவார்கள். சில சமயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்