ஆப்நகரம்

மயூரவல்லித் தாயாருக்கு வில்வத்தால் அர்ச்சனை!

சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்து உள்ளது ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில். இங்கே தாயாரின் திருநாமம் ஸ்ரீமயூரவல்லித் தாயார். இங்கு வந்து ஸ்ரீமயூரவல்லித் தாயாருக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டால், நினைத்தது நிறைவேறும். மகாலக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

TOI Contributor 9 Jun 2016, 3:08 pm
சென்னை மயிலாப்பூரில் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்து உள்ளது ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில். இங்கே தாயாரின் திருநாமம் ஸ்ரீமயூரவல்லித் தாயார். இங்கு வந்து ஸ்ரீமயூரவல்லித் தாயாருக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டால், நினைத்தது நிறைவேறும். மகாலக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
Samayam Tamil vilvam prayer for sri mayuravalli thayar
மயூரவல்லித் தாயாருக்கு வில்வத்தால் அர்ச்சனை!


மயிலை, மயூராபுரி, மயிலாப்பூர் என அழைக்கப்படும் புராணத் தொடர்பு கொண்ட திருத்தலத்தில், பிருகு முனிவர் தவம் செய்தார். அவருக்கு சயனக் கோலத்தில், சுருள்சுருளான கேசத்துடன் காட்சி தந்தார் பெருமாள். எனவே சயன கேசவர் என்றும் ஆதிகேசவ பெருமாள் என்றும் திருநாமம் அமைந்தது பெருமாளுக்கு!

சிவ பார்வதியும், லக்ஷ்மியும் பெருமாளும் சாப நிவர்த்திக்காக குடியேறி, விமோசனம் பெற்ற திருத்தலம் இது. எனவே இந்தத் தலத்துக்கு வந்து வேண்டினால், சிவனாரும் பெருமாளும் பார்வதியும் மகாலக்ஷ்மியும் அருள்பாலித்து பாப விமோசனம் தருவார்கள் என்று விவரிக்கிறது ஸ்தல புராணம்!

பிருகு முதலான முனிவர்கள் தவம் செய்த பூமி இது. இவர்களின் யாகத்தைக் கலைக்க அசுரர்கள் முயன்ற போது, பெருமாள் மகாலக்ஷ்மியுடன் யாகத்தில் இருந்து வெளிப்பட்டு அசுரக் கூட்டத்தை அழித்து, முனிவர்களைக் காத்தார்!

ஆழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரின் அவதார திருத்தலமும் இதுவே! லக்ஷ்மிதேவியே பேயாழ்வாருக்கு குருவாக இருந்து அருளியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!

பேயாழ்வாருக்கு குருவாக இருந்ததால், கல்வி ஞானம் பெற இங்கு வந்து வழிபடுகின்றனர்.

லக்ஷ்மிதேவி தவமிருந்து சாபம் நீங்கி, பெருமாளைக் கரம்பற்றினார். எனவே திருமண தோஷம் நீங்கும் தலம் என்கிறார்கள்! தாயாருக்கு வில்வார்ச்சனை செய்து, இரண்டு மணிகளை சந்நிதியின் கதவில் கட்டி பிரார்த்திக்கின்றனர். நிறைவேறியதும் இங்கு வந்து இன்னும் இரண்டு மணிகளைக் கட்டி, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்