ஆப்நகரம்

ஒருவரின் மரணத்தை முன் கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் தெரியுமா!?

ஒருவரின் மரணத்தை முன் கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் தெரியுமா!?

Samayam Tamil 10 Jan 2017, 4:13 am
பிறப்பு என்று ஒன்று இருந்தால் இறப்பு இருக்கும் என்பதே உலக நியதி. அப்படி வரும் இறப்பை சில அறிகுறிகள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம் என்கிறது பண்டைய இதிகாசங்களில் ஒன்றான சிவபுராணம்.
Samayam Tamil we can predict our deathby sivapuranam says study
ஒருவரின் மரணத்தை முன் கூட்டியே தெரிந்து கொள்ள முடியும் தெரியுமா!?


வாய், காது மற்றும் கண் செயலிழக்க தொடங்விட்டால் அடுத்த ஆறு மாதங்களில் மரணம் ஏற்பட்டுவிடும் என்று சிவபுராணத்தில் கூறப்படுகிறது. சாதாரண நிறத்தில் இருப்பவரின் உடல் திடீரென வெள்ளையாகவோ அல்லது மஞ்சளாகவோ மாறினால் ஆறு மாதத்தில் மரணம் நிகழும் என்கிறது சிவபுராணம். நாக்கு மற்றும் தொண்டையில் வறட்சி ஏற்பட்டு அது தொடர்ந்து கொண்டே இருந்தால் விரைவில் அவர் உயரிழப்பார். மனிதனின் இடது கை தொடர்ந்து நடுங்கி கொண்டே இருந்தால் அந்த மனிதர் விரைவில் இறந்து விடுவார் என்றும் சிவபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

எவர் ஒருவரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை சரியாக பார்க்க முடியவில்லையோ அவரை எமன் நெருங்குகிறார் என்ற பொருளாகும். கருடன், காகம், புறா யார் தலையில் வந்து உட்காருகிறதோ அதையும் மரணகுறி என்கிறது சிவபுராணம். எண்ணெய் மற்றும் தண்ணீரில் தோன்றும் பிரதிபலிப்பு ஒருவருக்கு தெரியவில்லை என்றால் அவருக்கு ஆறு மாதத்தில் மரணம் வரும் என்று சொல்லப்படுகிறது. அதே போல் ஒருவரால் நெருப்பை சரிவர பார்க்க முடியவில்லை என்றால் அவரை எமன் நெருங்குகிறான் என்றும் சிவபுராணம் சொல்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்