ஆப்நகரம்

மகாளயம் செய்தால் மங்களம்

பெற்றோர்கள் இறந்த தினத்தில் திதி செய்யாதவர் கூட, மஹாளயத்தை மறக்காமல் அவசியம் செய்ய வேண்டும்.

TNN 18 Sep 2017, 11:17 pm
பெற்றோர்கள் இறந்த தினத்தில் திதி செய்யாதவர் கூட, மஹாளயத்தை மறக்காமல் அவசியம் செய்ய வேண்டும்.
Samayam Tamil we should do mahalayam
மகாளயம் செய்தால் மங்களம்

தாய், தந்தையர்கள் இறந்த தினத்தில் சிரார்த்தம் எனப்படும் திதி செய்வது என்பது நம்முடைய வழக்கத்தில் ஒன்றாக இருக்கிறது. அவ்வாறாக இந்த தர்பணம் செய்யாதவர்கள் இன்னலுக்கு உள்ளாவார்கள் என்றும் கூறப்படுகிறது.

சரியான முறையில் செய்ய முடியாதவர்கள் கூட அரிசி, வாழைக்காய், தட்சிணை கொடுத்தாவது நம்முடைய பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி அடைய செய்ய வேண்டும்.

புராணத்தில் வசிஷ்ட மகரிஷி, தசரதர், துஷ்யந்தன் உளளேிட்டோர்கள் மஹாளயம் செய்து பேறு பெற்றார்கள் என்று கூறப்படுவதுண்டு.

அதிலும், ஸ்ரீதத்தாத்ரேயர் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்ய வேண்டும்.

இதே போல், திருமணம் தள்ளி போகும் குறைகளை உடையவர்கள், மஹாளயம் செய்ய வேண்டும். மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது என்பது பழமொழி.

எனவே குடும்பத்தில் நிலவும் இது போன்ற குறைகளுக்கு சிறந்த, எளிய பரிகாரம் என்னவென்றால், மஹாளய பட்ச நாளில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வது என்பது முன்னோர்கள் வாக்கு.

அடுத்த செய்தி

டிரெண்டிங்