ஆப்நகரம்

செல்வம் அளிக்கும் அட்சய திருதியை பெருமாள்!!

நவ திருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் அமைந்துள்ளது.

TNN 28 Dec 2016, 6:27 am
நவ திருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் அமைந்துள்ளது.
Samayam Tamil wealth giving lord perumal
செல்வம் அளிக்கும் அட்சய திருதியை பெருமாள்!!


இத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாள், குபேரனுக்கு ‘மரக்கால்’ என்ற அளவைப் பாத்திரம் மூலம் செல்வத்தை அளந்து கொடுத்தார். அந்த மரக்காலைத் தான், தன்னுடைய தலைக்கு அடியில் வைத்தபடி இத்தலத்தில் பள்ளிகொண்டிருக்கிறார். இவருக்கு ‘வைத்த மாநிதி’ என்றும், ‘செல்வம் அளித்த பெருமாள்’ என்றும் பெயர் உண்டு. அட்சய திருதியை நாளில் இவரை வழிபட்டால் செல்வம் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வளம் தரும் வரதராஜ பெருமாள்!!

மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் வழியில் விளநகர் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் வரதராஜ பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். 16 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி தரும் இந்த பெருமாளை, புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தன்று வழிபட்டால் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். இந்த பெருமாளின் முன்பு அமர்ந்து ‘ஓம் நமோ நாராயணாய நம’ என 108 முறை உச்சரித்தால் வாழ்க்கை வளமாகும்.
Wealth giving Lord Perumal

அடுத்த செய்தி

டிரெண்டிங்