ஆப்நகரம்

செய்யும் தொழிலே தெய்வம்! - இன்று ஆயுத பூஜை

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை எல்லோருக்கும் பொதுவான பூஜை ஆகும் .கொலு வைத்து இருப்பவர்கள் ,வைக்காமல் இருப்பவர்கள் அனைவருமே செய்யும் பூஜை இதுவாகும். நவராத்திரியை மூப்பெரும் தெய்வங்களான துர்க்கா ,லெட்சுமி, சரஸ்வதியை வணங்குவதற்காகவே உள்ள நாட்கள் .

TNN 28 Sep 2017, 6:39 pm
சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை எல்லோருக்கும் பொதுவான பூஜை ஆகும் .கொலு வைத்து இருப்பவர்கள் ,வைக்காமல் இருப்பவர்கள் அனைவருமே செய்யும் பூஜை இதுவாகும். நவராத்திரியை மூப்பெரும் தெய்வங்களான துர்க்கா ,லெட்சுமி, சரஸ்வதியை வணங்குவதற்காகவே உள்ள நாட்கள் .
Samayam Tamil work is worship today ayudha pooja festival
செய்யும் தொழிலே தெய்வம்! - இன்று ஆயுத பூஜை


ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு உடல் வலிமையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வமும் அறிவு வளமும் மிகவும் அவசியம். அதனை வெளிப்படுத்த உடல் வலிமையின் சக்தியாக ஸ்ரீதுர்க்கா தேவியையும், வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தை நல்கவல்ல சக்தியாக ஸ்ரீமஹா லக்ஷ்மியையும் அறிவையும் ஆற்றலையும் தரவல்ல கல்வியின் தேவதையாக ஸ்ரீசரஸ்வதி தேவியையும் நாம் வழிபட்டு அந்த தேவியரின் அருள் பெற்று வலிமை, செல்வம், கல்வி ஆகிய மூன்றினையும் பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட பண்டிகையே நவராத்திரி எனப்படும்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லெட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியவை. 10ம் நாள் மூன்று தேவியரும் சேர்ந்து பராசக்தியாக தோன்றி, மகிஷ்சாசுர அரக்கனை வதம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதையே விஜய தசமியாக கொண்டாடுகிறோம்.

கலைமகளாம் சரஸ்வதியை ஒவ்வொரு வீட்டிலும் படம் வைத்தோ ,விக்கிரகம் வைத்தோ வணங்கலாம். அதேவேளையில், அலுவலங்களில் கல்விக்கு பதிலாக தொழிலை மூலதனமாக வைத்து ஆயுத பூஜை செய்து வணங்குகிறோம்.

உயிர் உள்ளவற்றிலும், உயிர் அற்ற பொருட்களிலும் நீக்கமற இருப்பவள். அதனாலேயே, ஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடுகிறோம் . கல்வியுடன் கலைகளுக்கும் உரியவள் சரஸ்வதி.

விஜயதசமி பூஜை

ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜயதசமி அன்று மறுபூஜை செய்து தொழில் தொடங்கினால் அந்த வருடம் முழுவதும் தொழில் நிலை சிறப்படைந்து நன்றாக செல்வச் செழிப்பு உண்டாகும் என்பது ஐதீகம்.!

அடுத்த செய்தி

டிரெண்டிங்