ஆப்நகரம்

அதிமுக வேட்பாளர் உறவினர் வீட்டில் ஒரு கோடி பறிமுதல்

ஈரோடு மாவட்டம் அருகே அதிமுக வேட்பாளரின் உறவினர் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

TNN 13 May 2016, 10:37 am
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அருகே அதிமுக வேட்பாளரின் உறவினர் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil rs 1 crore seized at aiadmk relative home near erode
அதிமுக வேட்பாளர் உறவினர் வீட்டில் ஒரு கோடி பறிமுதல்


ஈரோடு அருகே கணபதிபாளையத்தில் உள்ள அதிமுக வேட்பாளர் சிவசுப்ரமணியத்தின் உறவினர் வீட்டில் நேற்று நலிரவு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.1.கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் சிவசுப்ரமணியம் போட்டியிடுகிறார்.

வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துரியா மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவரது உறவினர் மற்றும் வேட்பாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாளையுடன் பிரசாரம் நிறைவுபெறும் நிலையில், பிரசாரத்துடன் பணப்பட்டுவாடாவும் தீவிரம் அடைந்துள்ளது.

அடுத்த செய்தி