ஆப்நகரம்

சா்வதேச அளவிலான மணல் சிற்ப போட்டியில் இந்தியா சாா்பில் போட்டியிட சுதா்சன் பட்நாயக் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்

2017ம் ஆண்டுக்கான சா்வதேச அளவிலான மணல் சிற்ப போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியா சாா்பில் மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

TOI Contributor 30 Jul 2017, 10:46 pm
2017ம் ஆண்டுக்கான சா்வதேச அளவிலான மணல் சிற்ப போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியா சாா்பில் மணல் சிற்ப கலைஞா் சுதா்சன் பட்நாயக் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
Samayam Tamil sand artist sudarshan pattnaik to represent india in sand sculpting championship
சா்வதேச அளவிலான மணல் சிற்ப போட்டியில் இந்தியா சாா்பில் போட்டியிட சுதா்சன் பட்நாயக் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்


ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச அளவிலான மணல் சிற்ப போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 2017ம் ஆண்டுக்கான சா்வதேச போட்டி வருகிற ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட 13 நாடுகள் கலந்து கொள்ளும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்தியா சாா்பில் சுதா்சன் பட்நாயக் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா் இதுவரை 50க்கும் மேற்பட்ட சா்வதேச மணல் சிற்ப போட்டிகளில் கலந்து கொண்டு பல முறை வெற்றியும் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

”கடலை பாதுகாப்போம், பூமியை பாதுகாப்போம்” என்ற கருத்தை மையமாக வைத்து சுதா்சன் பட்நாயக் மணல் சிற்பத்தை வடிவமைக்க உள்ளதாக தொிகிறது. மேலும் கடல் மாசுபடுவது, அதன் மூலம் ஏற்படும் விளைவுகள் உள்ளிட்டவை சிற்பத்தில் இடம் பெறும் என்று தொிகிறது.

Sand artist Sudarshan Pattnaik to represent India in Sand Sculpting Championship

அடுத்த செய்தி