ஆப்நகரம்

தானாக மின் இணைப்பைத் துண்டிக்கும் ஸ்மார்ட் மீட்டர்

மின்கட்டணம் செலுத்தாவிட்டால் தானாகவே மின் இணைப்பைத் துண்டிக்கும் ஸ்மார்ட் மின் மீட்டர்களை திரிபுரா அரசு பயன்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறது.

TOI Contributor 9 Jul 2017, 5:32 pm
அகர்தலா: மின்கட்டணம் செலுத்தாவிட்டால் தானாகவே மின் இணைப்பைத் துண்டிக்கும் ஸ்மார்ட் மின் மீட்டர்களை திரிபுரா அரசு பயன்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறது.
Samayam Tamil smart meters for timely bill collection in tripura
தானாக மின் இணைப்பைத் துண்டிக்கும் ஸ்மார்ட் மீட்டர்


திரிபுராவில் இடதுசாரி முன்னணி அரசு மின் கட்டணங்களை வசூலிப்பதை எளிமையாக்கும் விதமாக, 'ஸ்மார்ட் மீட்டர்' என்ற தானியங்கி கருவியை மாநிலம் முழுவதும் பயன்பாட்டுக்குக் கொண்டுவர இருக்கிறது. முதல் கட்டமாக 8000 ஸ்மார்ட் மீட்டர்கள் பொறுத்தப்பட்டுள்ளன.


இது குறித்து அம்மாநிலத்தின் மின்சாரத்துறை அமைச்சர் மானிக் தேய் கூறுகையில், மாநிலம் முழுவதும் 45,200 ஸ்மார்ட் மீட்டர்கள் பொறுத்தப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளார். உரிய நேரத்தில் மின் கட்டணங்களை வசூலிக்க இந்த கருவி உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்மார்ட் மீட்டர்கள் பொறுத்தப்பட்ட ஒரு வீட்டின் மின் இணைப்புக்கு உரிய கட்டணம் குறித்த தேதிக்குள் கட்டப்படவில்லை என்றால் மின் இணைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டுவிடும். அதே போல, மின் கட்டணத்தைச் செலுத்திய உடனேயே மின் இணைப்பு மீண்டும் கிடைத்துவிடும். இதனை ஸ்மார்ட் மீட்டர் தானாகவே செய்வதால் மின் வாரிய ஊழியர்களின் தலையீடு இதில் இல்லை.

ஏற்கெனவே, 80 சதவீதம் மின் கட்டணம் உரிய நேரத்தில் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் தாமதமாகப் பெறப்படும் 20 சதவீதம் கட்டணங்களை உரிய நேரத்தில் செலுத்தச் செய்ய இந்த ஸ்மார்ட் மீட்டர் வழிவகுக்கும் என்றும் திரிபுரா மாநில மின்சார வாரியம் கூறியுள்ளது.

அடுத்த செய்தி