விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக.,வைச் சேர்ந்த அப்பாவு ஆகியோர் 100க்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர்.
திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கும், அதிமுக வேட்பாளர் முருகுமாறனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முடிவில், திருமாவளவன் 48,363 வாக்குகளைப் பெற்று, வெறும் 87 வாக்கு வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளர் முருகுமாறன், 48,450 ஓட்டுகளைப் பெற்றார்.
இதேபோல, திருநெல்வேலியில் உள்ள ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு 49 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவர், 69,551 ஓட்டுகளைப் பெற, அதிமுக வேட்பாளர் உதயகுமார் 69,590 ஓட்டுகளுடன் வெற்றி பெற்றார். எனினும், ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, அப்பாவு போராட்டத்தில் ஈடுபட்டதால், அவரை அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
அதேசமயம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.அரசு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முனுசாமியை 304 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தும் உள்ளார்.
திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டார். இவருக்கும், அதிமுக வேட்பாளர் முருகுமாறனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முடிவில், திருமாவளவன் 48,363 வாக்குகளைப் பெற்று, வெறும் 87 வாக்கு வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளர் முருகுமாறன், 48,450 ஓட்டுகளைப் பெற்றார்.
இதேபோல, திருநெல்வேலியில் உள்ள ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு 49 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இவர், 69,551 ஓட்டுகளைப் பெற, அதிமுக வேட்பாளர் உதயகுமார் 69,590 ஓட்டுகளுடன் வெற்றி பெற்றார். எனினும், ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, அப்பாவு போராட்டத்தில் ஈடுபட்டதால், அவரை அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
அதேசமயம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி.அரசு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முனுசாமியை 304 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தும் உள்ளார்.