ஆப்நகரம்

”மூடிய காரில் மாட்டிக் கொண்ட சிறுவன்”: வெப்பத்தினால் பலி..!

மூடிய காருக்குள் மாட்டிக் கொண்ட 8 வயது சிறுவன், வெப்பத்தினால் உயிரிழந்துள்ளான்.

TNN 6 Jun 2017, 8:48 pm
மூடிய காருக்குள் மாட்டிக் கொண்ட 8 வயது சிறுவன், வெப்பத்தினால் உயிரிழந்துள்ளான்.
Samayam Tamil  8 year old boy died inside locked car
”மூடிய காரில் மாட்டிக் கொண்ட சிறுவன்”: வெப்பத்தினால் பலி..!


டெல்லியைச் சேர்ந்த 8 வயது சிறுவனான சோனு, நேற்று நண்பகல் 12 மணியளவில் வெளியில் விளையாடச் சென்றுள்ளான். அதன் பின்னர் இரண்டு மணி நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பாததால், அவனது பெற்றோர்கள் சிறுவனை தேடத் துவங்கியுள்ளனர்.

வீட்டின் வெளியே சிறுவன் கிடைக்காததால், வீட்டின் அருகில் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் சிறுவனை தேடியுள்ளனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் சிறுவன் ஒருவன் வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததை, அந்த காரின் உரிமையாளர் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் பூட்டிச் சென்ற தனது காரை அந்த சிறுவன் எப்படி திறந்து உள்ளே சென்றான் என தெரியவில்லை? என கார் உரிமையாளர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் வெப்பம் காரணமாக சிறுவன் காருக்குள் இறந்துள்ளதும், அவனது உடலில் சில தீக்காயங்கள் இருந்துள்ளதையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். மேலும் காரின் கதவு லேசாக திறந்து இருப்பதை பார்த்த சிறுவன், காரின் வெளிப்புறத்தில் இருந்து கார் கதவை பலமாக இழுந்து திறந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து கார் உரிமையாளரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இரண்டாம் வகுப்பு படித்து வரும் சோனுவின் பெற்றோர்கள் இருவரும் காய்கறி வியாபாரிகள். இவர்கள் இருவரும் ஊனமுற்றோர்கள் என்பது சோகத்திற்குரியது.

8-year-old boy died inside locked car

அடுத்த செய்தி