ஆப்நகரம்

ஒரு SMS-க்கு இத்தனை அக்கபோரா..!-கட்டி உருண்ட இரு தரப்பினர்

விளையாட்டாக சிறுமி அனுப்பிய SMS-ஆல் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் 7 பேர் காயமடைந்துள்ள சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது.

TNN 31 Oct 2016, 11:34 am
விளையாட்டாக சிறுமி அனுப்பிய SMS-ஆல் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் 7 பேர் காயமடைந்துள்ள சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil  prank i love you sms made a violent group clash 7 injured 11 arrested
ஒரு SMS-க்கு இத்தனை அக்கபோரா..!-கட்டி உருண்ட இரு தரப்பினர்


விழுப்புரம் மாவட்டம் கீழப்புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விதவைப் பெண்ணான ராஜவேணி என்பவர் தனியாக வசித்து வருகிறார்.இவரை 15 வயதான பக்கத்து வீட்டு சிறுமி அடிக்கடி பார்க்க வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.இந்நிலையில் ராஜவேணியின் செல்போனிலிருந்து விளையாட்டாக அவருடைய உறவினரான கோபிநாத் என்பவருக்கு அந்த 15 வயது பெண் “ஐ லவ் யூ” என SMS அனுப்பியுள்ளார்.

இதனை பார்த்த கோபிநாத்,கிருஷ்ணவேணிதான் SMS அனுப்பியுள்ளதாக நினைத்து அவருக்கு போன் செய்து திட்டியுள்ளார்.ஆனால் தான் SMS அனுப்பவில்லை என ராஜவேணி மறுத்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.இதனை தொடர்ந்து தனது உறவினரான அய்யப்பன் என்பவரிடன் ராஜவேணி நடந்த விஷயங்களை கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த ஐய்யப்பன் தனது நண்பர்கள் நால்வருடன் கோபிநாத்தின் வீட்டிற்கு சென்று அவரை திட்டிவிட்டு சென்றுள்ளார்.தன் வீட்டினரின் முன் தன்னை அவமரியாதை செய்து விட்டார்களே என கோபிநாத் தன்னுடைய நண்பர்கள் ஐந்து பேருடன் சென்று ஐய்யப்பனிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.பின்னர் இருதரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதனப்படுத்தியுள்ளனர்.இந்த சண்டையில் இருதரப்பிலிருந்தும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Prank ‘I love you’ SMS made a violent group clash, 7 injured, 11 arrested

அடுத்த செய்தி