ஆப்நகரம்

’3,000 முறை கற்பழிக்கப்பட்டேன்’ -அப்பாவி சிறுமியின் கண்ணீர் கதை..!

கடந்த ஆறு ஆண்டுகளாக அப்பாவி சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து வந்த காமுகன் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளான்.

TNN 7 Aug 2016, 5:49 pm
கடந்த ஆறு ஆண்டுகளாக அப்பாவி சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து வந்த காமுகன் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளான்.
Samayam Tamil  sex abuse survivor narrates horrifying torment
’3,000 முறை கற்பழிக்கப்பட்டேன்’ -அப்பாவி சிறுமியின் கண்ணீர் கதை..!



தனது பத்து வயதிலிருந்து 16 வயது வரை அந்த காமுகனால் சீரழிக்கப்பட்ட சிறுமி,தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.லண்டனைச் சேர்ந்த கெயித் டவுடெண்ட் என்ற அந்த காமுகனின் குழந்தைகளை பாராமரிக்கும் பணிக்காக அவனுடைய வீட்டுக்கு இந்த சிறுமி சென்றுள்ளார்.அப்போது அந்த சிறுமிக்கு வெறும் பத்து வயது மட்டுமே.அன்றிலிருந்து தொடர்ந்து ஆறு வருடங்களாக அந்த சிறுமியை மிரட்டி, பாலியல் பலாத்காரத்திற்கு அந்த காமுகன் உட்படுத்தியுள்ளான்.அவனுடைய மனைவி அலுவலக வேலைகளில் எப்போதும் பிசியாக இருப்பதால்,இவன் செய்யும் கொடுமைகளை கவனிக்கவில்லை.


தினசரி இரண்டு முறை அல்லது நள்ளிரவு நேரம் என கடந்த ஆறு வருடங்களில் சுமார் 3000 முறை கற்பழிக்கப்பட்டதாக அந்த சிறுமி அதிர்ச்சித் தகவலைதெரிவித்துள்ளார்.தனக்கு மாதவிடாய் எப்போது முடிய வேண்டும் என அந்த காமுகனிடம் அந்த சிறுமி தெரிவிக்க வேண்டுமாம்.ஒருவேளை அவர் பொய் கூறினால்,அதனையும் கண்டுபிடித்து தனது கொடுமைகளை செய்யத் தொடங்கி விடுவானாம்.
ஒருமுறை கெயித்தின் வீட்டிலிருந்த வந்த சிறுமியின் பின்புறத்தில் மரத்துண்டுகள் ஓட்டியிருப்பதை அவரின் தந்தை பார்த்துள்ளார்.இது குறித்து விசாரித்த போதுதான்,அந்த மிருகத்தின் வெறியாட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


தற்போது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டிற்காக கெயித்துக்கு 19 வருடங்கள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.”அவன் என் சிறுவயது காலத்தை முழுக்க அழித்துவிட்டான்.அவன் ஜெயிலுக்கு சென்ற பின்னர்தான் எனக்கு உண்மையான விடுதலை கிடைத்துள்ளது.இனிதான் என்னுடைய எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டும்.”என அந்த அப்பாவி சிறுமி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்