ஆப்நகரம்

இன்டர்நெட் கனெக்ஷன் இல்லை என்பதால் கதறி அழுத சிறுவன்!

இன்டர்நெட் கனெக்ஷன் இல்லை என்பதால் கதறி அழுத சிறுவன்!

TOI Contributor 7 Feb 2017, 4:39 pm
இன்டர்நெட் இல்லாமல் இன்று பெரும்பாலான வேலைகள் நடப்பதே கிடையாது. அந்த அளவிற்கு நம் அன்றாட வாழ்வுடன் இன்டர்நெட் இரண்டற கலந்துவிட்டது. அதே சமயம் பலரும் இன்டர்நெட் இல்லாமல் வாழ முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதற்கு அடிமையாவது கூட நடந்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு இன்டர்நெட்டின் மீதான மோகம் அதிகரித்துள்ளது.
Samayam Tamil 10 year old boy crying for not getting internet access
இன்டர்நெட் கனெக்ஷன் இல்லை என்பதால் கதறி அழுத சிறுவன்!


10 வயது சிறுவன் கதறி அழுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்டு இருந்தது. அந்த வீடியோவுடன் சிறுவனின் தந்தை இன்டர்நெட் கனெக்ஷன் இல்லாததால் தன் மகன் அழுவதாக குறிப்பிட்டு இருந்தார். குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் வை ஃபை சரியான வேலை செய்யவில்லை. அதனால் ஐபேடில் டிரான்ஃஸ்பார்மர்ஸ் படம் பார்க்க முடியவில்லை என்று 10 வயது சிறுவன் ஒருவன் கதறி அழுதுள்ளார். சிறுவர்கள் இன்டர்நெட்டுக்கு அடிமையாகி வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.


அடுத்த செய்தி