ஆப்நகரம்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மாமா கைது!!

கடந்த ஓராண்டாக 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுமியின் மாமாவை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் புது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

TNN 18 Jul 2017, 1:28 pm
கடந்த ஓராண்டாக 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுமியின் மாமாவை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் புது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Samayam Tamil 10 year old girl molested by her uncle
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மாமா கைது!!


டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஜமியா நகரை சேர்ந்த ஒருவர் 10 வயது சிறுமியை கடந்த ஓராண்டாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவ்வாறு நடந்துகொண்டவர் சிறுமியின் மாமா என்பதுதான் கொடுமையான செய்தி.

ஜமியா நகரைச் சேர்ந்த அந்த நபர் மேற்கு வங்கத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றார். அந்த வீட்டில் 10 வயது சிறுமி இருந்துள்ளார். அந்த சிறுமிக்கு இவர் மாமா உறவு. சிறுமி என்றும் பாராமல் அந்த சிறுமியிடம் தனது பாலியல் வெறியை தீர்த்துக் கொண்டார். அந்த சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற பின்னர் அந்த சிறுமியிடம் தவறாக நடந்துகொள்வாராம். இப்படி ஓராண்டு அந்த சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார்.

தான் செய்வதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என்று அந்த சிறுமியை மிரட்டியுள்ளார். இதற்கிடையே அந்த கொடூரன் ஊருக்கு சென்றுவிட, தனக்கு நேர்ந்த அவலத்தை பெற்றோரிடம் அந்தக் சிறுமி தெரிவித்தார். பெற்றோர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் சிறப்புப் படை அமைத்து சிறுமியின் மாமவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


10 year old girl molested by her uncle

அடுத்த செய்தி