ஆப்நகரம்

நண்பனை காம்பஸால் குத்திக்கொன்ற கொடூர சிறுவர்கள்

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் இருவர் உடன் படிக்கும் நண்பன் ஒருவனை காம்பஸால் குத்திக்கொன்றுள்ளனர்.

TOI Contributor 2 May 2017, 3:39 pm
டெல்லி: ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவர்கள் இருவர் உடன் படிக்கும் நண்பன் ஒருவனை காம்பஸால் குத்திக்கொன்றுள்ளனர்.
Samayam Tamil 14 year old stabbed to death with compass over girl
நண்பனை காம்பஸால் குத்திக்கொன்ற கொடூர சிறுவர்கள்


வடக்கு டெல்லியில் உள்ள விகாஸ்புரியைச் சேர்ந்த சிறுவன் மன்ஜித். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அவனை அதே பகுதியைச் சேர்ந்த உடன் படிக்கும் நண்பர்கள் இருவரே காம்பஸால் குத்திக்கொன்றுள்ளனர்.

திங்கட்கிழமை மாலை பள்ளிக்குச் சென்று திரும்பும் வழியில், சாவ்லா என்னும் இடத்தில் உள்ள ஓடை ஒன்றின் அருகே, மன்ஜித்தோடு அவனுடன் படிக்கும் நண்பர்கள் இருவரும் சண்டையிட்டுள்ளனர். அப்போது, மன்ஜித்தை மற்ற இரு சிறுவர்களும் தங்கள் ஜியோமெட்ரிக் பாக்ஸில் உள்ள காம்பஸை எடுத்துக்குத்தியுள்ளனர். இதனால், வலி தாங்காமல் அலறிய மன்ஜித்தின் குரல் கேட்டு அக்கப்பக்கத்தினர் அங்கே வந்தபோது அந்த சிறுவர்கள் இருவரும் மன்ஜித்தை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

மன்ஜித்தை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோதும் வரும் வழியிலேயே அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், இரண்டு இடங்களில் மோசமாக அடிப்பட்டது உயிருக்கு ஆபத்தாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இறந்த சிறுவனைத் தாக்கிய அவனது இரு நண்பர்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மன்ஜித்துக்கும் அந்த இரு சிறுவர்களுக்கும் உடன் படிக்கும் மாணவி ஒருவர் தொடர்பாக சமீபத்தில் சண்டை வந்தது என்றும் அதற்குப் பிறகு அவர்களுடன் மன்ஜித் எங்கும் செல்வதில்லை என்றும் மன்ஜித்தின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி