ஆப்நகரம்

15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஒருமாத சித்ரவதைக்கு பின் மீட்பு

15 வயது பெங்காலி சிறுமி, ஒருமாத பாலியல் சித்ரவதைக்கு பின் காவல்துறையால் மீட்கப்பட்டார்.

TNN 25 Feb 2017, 2:49 pm
கொல்கத்தா: 15 வயது பெங்காலி சிறுமி, ஒருமாத பாலியல் சித்ரவதைக்கு பின் காவல்துறையால் மீட்கப்பட்டார்.
Samayam Tamil 15 year old bengal girl trafficked raped in gurgaon
15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ஒருமாத சித்ரவதைக்கு பின் மீட்பு


மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, அவளது பெற்றோர்கள் பணத்திற்காக விற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவளிடம் வேலை வாங்கி தருவதாக கூறி டெல்லி அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவள் விபச்சார கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவர்கள் சிறுமியை முரிஷிதாபாத் அருகே உள்ள ஜகந்நாதபூருக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து குர்கானிற்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு வேலை செய்த வீட்டு வேலையும் பெண்ணிடன் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பெண் அருகிலுள்ள காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் சிறுமியை மீட்டு, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர். கடந்த ஒருமாதமாக தொடர்ச்சியாக சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாள். அவளுக்கு தேவையான உதவிகளை அளித்து, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிடம் ஒப்படைத்துள்ளனர்.

A 15-year-old girl, residing in Jagannathpur in Murshidabad was rescued from a trafficking gang after being repeatedly raped in Gurgaon for the past one month.

அடுத்த செய்தி