ஆப்நகரம்

பிளாஸ்டிக் கவரில் சுற்றி சாக்கடையில் வீசிய 19 பெண் சிசுக்கள் கண்டெடுப்பு

பிளாஸ்டிக் கவரில் சுற்றி சாக்கடையில் வீசிய 19 பெண் சிசுக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 7 Mar 2017, 2:13 am
மும்பை: பிளாஸ்டிக் கவரில் சுற்றி சாக்கடையில் வீசிய 19 பெண் சிசுக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 19 female foetuses found in garbage of maharastra
பிளாஸ்டிக் கவரில் சுற்றி சாக்கடையில் வீசிய 19 பெண் சிசுக்கள் கண்டெடுப்பு


மகாராஷ்டிர மாநிலம் சங்கி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் தத்தாரே ஷிண்டே தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் உயிரிழந்த இளம்பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதையும், அந்த பெண் சிசு சாக்கடையில் வீசப்பட்டதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் கருச்சிதைவு செய்யப்பட்ட 19 பெண் சிசுக்கள் ஒரு பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டு இருந்தது தெரியவந்தது.

அந்த சாக்கடை மருத்துவமனைக்கு பின்புறமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை அடுத்து, மருத்துவர் பாபா சாஹேப் கித்ராபூர் மற்றும் உயிரிழந்த இளம்பெண்ணின் கணவர் பிரவீன் ஜமாடே ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர் பாபா தலைமறைவாக உள்ளார். அவர் கருச்சிதைவு செய்யப்பட்ட பெண் சிசுக்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வீசுவதை வழக்கமாக கொண்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

19 Female foetuses found in garbage of Maharastra.

அடுத்த செய்தி