ஆப்நகரம்

புதுச்சேரி: கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை, 2 பேர் கைது!

ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா - செல்போன்கள் பறிமுதல்.

Samayam Tamil 15 Dec 2018, 7:12 pm
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா - செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Samayam Tamil d23e78c6feeea9a29dc1826600337646


புதுச்சேரியில் சமீபகாலமாக பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் திருட்டு தனமாக போதை பொருளான கஞ்சா விற்பனை செய்து வருவதாக வந்த தகவலின் படி , புதுச்சேரி மேட்டுப்பாளையம் வடக்கு காவல் துறை கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன்அவர்களின் உத்தரவின் பேரில் காவல் துறை ஆய்வாளர் தங்கமணி அவர்கள் தலைமையில் போலீசார் சோதனை செய்தனர்.

மேலும் இது சம்பந்தமாக காவல் துறை கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா விற்பனை செய்து வந்ததாக புதுச்சேரி காந்தி திருநல்லார் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஐயப்பன், திருவரங்கன் ஆகிய இருவரும் கைது செய்தனர். மேலும் 2 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கஞ்சா மதிப்பு ரூ. 50 ஆயிரம் இருக்கும் என்றும், சிறப்பாக செயல்பட்டு குற்றவாளி களை கைது செய்த போலீசார் அனைவரையும் பாராட்டி பேட்டி அளித்தார்.

அடுத்த செய்தி