ஆப்நகரம்

மரத்தில் பயங்கரமாக மோதிய கார்; உடல் நசுங்கி பலியான இருவர்!

நிலை தடுமாறி சென்ற கார், மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

TNN 23 Sep 2017, 4:43 pm
நாமக்கல்: நிலை தடுமாறி சென்ற கார், மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
Samayam Tamil 2 dead in namakkal accident
மரத்தில் பயங்கரமாக மோதிய கார்; உடல் நசுங்கி பலியான இருவர்!


நாமக்கல் மாவட்டத்தில் மனோரஞ்சிதம் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மாணிக்கட்டிதூர் அருகே சென்று கொண்டிருந்த போது, கார் நிலைதடுமாறியது. இதையடுத்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த சூழலில் மருத்துவமனையில் இருவரும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 dead in Namakkal accident.

அடுத்த செய்தி