ஆப்நகரம்

வகுப்பறையில் இடம் மாற்றி உட்கார வைத்தால் சேலம் மாணவிகள் தற்கொலை!

சேலத்தில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் இருவர் வகுப்பில் இடம் மாற்றி உட்கார வைத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

TNN 10 Dec 2017, 6:29 am
சேலம்: சேலத்தில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் இருவர் வகுப்பில் இடம் மாற்றி உட்கார வைத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
Samayam Tamil 2 school going girls committed suicide by jumping off from a 4 storage building in salem
வகுப்பறையில் இடம் மாற்றி உட்கார வைத்தால் சேலம் மாணவிகள் தற்கொலை!


சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படித்து வரும் ஜெயராணி மற்றும் கவிஸ்ரீ என்ற மாணவிகள் மாலை பள்ளி முடிந்தும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால், மாணவிகளைக் கண்டுபிடித்து தருமாறு பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் மாணவிகளைதட தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை இரண்டு மாணவிகளும் உணவகம் ஒன்றின் நான்காவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் ஜெயராணி என்ற மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மாணவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்பக் கட்ட விசாரணையில் நெருங்கிய தோழிகளான அவர்கள் வகுப்பறையில் பேசிக் கொண்டிருந்ததால் ஆசிரியர் தனித் தனியே வெவ்வேறு இடங்களில் உட்கார வைத்ததாகவும் அதனால் மனமுடைந்து மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி