ஆப்நகரம்

திருவண்ணாமலை: கட்டிடத் தொழிலாளிகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் பலி!

தனியார் மருத்துவமனைக் கட்டிடப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Samayam Tamil 2 Mar 2018, 4:15 pm
திருவண்ணாமலை: தனியார் மருத்துவமனைக் கட்டிடப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Samayam Tamil 2 workers died as wall collapsed and fell down on them in tiruvannamalai
திருவண்ணாமலை: கட்டிடத் தொழிலாளிகள் மீது சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் பலி!


திருவண்ணாமலையைச் சேர்ந்த சீனிவாசன் என்ற மருத்துவர், தனக்கு சொந்தமான இடத்தில் மருத்துவமனைக் கட்டிவந்தார். இதற்கான கட்டுமானப் பணிகளில் 5 கூலித் தொழிலாளிகள் பணியாற்றி வந்தனர்.

இந்தக் கட்டுமானப் பணிகள் நடக்கும் இடத்திற்கு அருகே பில்லூரார் மடம் என்ற பழமையான மடம் ஒன்று உள்ளது. இன்று காலை கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தபோது, மடத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது.

இந்த இடிப்பாட்டில் சிக்கி ரமேஷ், அலமேலு என்ற 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், இடிபாட்டில் சிக்கிய இரண்டு தொழிலாளர்களில் லக்ஷ்மன் என்ற தொழிலாளி சடலமாகவும், மற்றொரு தொழிலாளி மோசமான நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர். உயிருடன் மீட்கப்பட்ட இருவருக்கும் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி