ஆப்நகரம்

ஜைன மத துறவியாக மாறும் சிஏ படித்த 24 வயது கோடீஸ்வர தொழிலதிபர்!

தனது இல்லற வாழ்வை தொலைத்து, ஜைன மத துறவியாக இளைஞர் ஒருவர் மாறவுள்ளார்.

Samayam Tamil 19 Mar 2018, 3:34 pm
கோல்காபூர்: தனது இல்லற வாழ்வை தொலைத்து, ஜைன மத துறவியாக இளைஞர் ஒருவர் மாறவுள்ளார்.
Samayam Tamil Mokshesh Shah
ஜைன மத துறவி


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் மொக்சேஷ் ஷா(24). இவர் சிஏ முடித்து விட்டு, மகாராஷ்டிர மாநிலம் கோல்காபூர் பகுதியில் தொழில் செய்து வருகிறார்.

இவரது ஆண்டு வருமானம் ரூ.100 கோடியை தாண்டுகிறது. இவர் தனது இல்லற வாழ்வில் இருந்து, விலகிச் செல்ல முடிவு செய்துள்ளார்.

எனவே வரும் ஏப்ரல் 20ஆம் தேதி ஜைன மதத் துறவியாக மாற இருப்பதாக முறைப்படி அறிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது.

அகமதாபாத் அருகே அமியாபூரில் தபோவல் சான்ஸ்கர்பித்தில், ரத்ன முனிராஜ் ஜின் பிரேம் விஜய்ஜி மோட்சம் அளிக்கிறார்.

அவரது குடும்பத்தில் இருந்து துறவியாகும் முதல் நபர் மொக்சேஷ் ஷா ஆவார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், பணத்தால் எதையும் வாங்க முடிந்தால், அனைத்து பணக்காரர்களும் மகிழ்ச்சியாக இருப்பர்.

உள்ளார்ந்த மகிழ்ச்சி வேண்டுமென்றால், எதையும் பெறக்கூடாது. ஏதாவது ஒன்றை இழக்க வேண்டும். கடந்த ஆண்டே துறவியாக மாற விரும்பினேன். ஆனால் இந்த ஆண்டு மாற பெற்றோர்கள் வலியுறுத்தினர்.

மோட்சம் என்பது மிகச் சிறந்த ஒன்று. அதேசமயம் பிறருடைய வாழ்க்கைக்கும் நாம் உதவி செய்ய வேண்டும் என்று மொக்சேஷ் ஷா கூறியுள்ளார்.

24 year old CA to take diksha to become jain monk.

அடுத்த செய்தி