ஆப்நகரம்

டெல்லியில் லிஃப்ட் கேட்ட பெண் ஓடும் காரிலேயே பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்!

தலைநகர் டெல்லியில் லிஃப்ட் கேட்ட பெண், ஓடும் காரிலேயே கதற கதற பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 22 Feb 2017, 12:20 pm
தலைநகர் டெல்லியில் லிஃப்ட் கேட்ட பெண், ஓடும் காரிலேயே கதற கதற பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 24 year old woman offered lift raped on her way back from delhis hauz khas
டெல்லியில் லிஃப்ட் கேட்ட பெண் ஓடும் காரிலேயே பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்!


அங்குள்ள அலிப்பூர் பகுதியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது 24. அவர், நள்ளிரவில் தனது உறவினருடன் ஓட்டல் ஒன்றுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பினார். வழியில் பேருந்து, டாக்ஸி எதுவும் கிடைக்கப் பெறாததால், அவ்வழியே வந்த கார் ஒன்றில் அந்த பெண் லிஃப்ட் கேட்டுள்ளார்.

லிஃப்ட் கொடுக்க வந்த நபர், குறிப்பிட்ட பெண்ணை மட்டும் காரில் ஏற்றிக் கொண்டு, வேகமாகச் சென்றுள்ளார். இதைப் பார்த்ததும் அவரது உறவினர் அதிர்ச்சி அடைந்து, காரை பின்தொடர்ந்தார். எனினும், அங்கிருந்து மறைவிடத்திற்கு காரை ஓட்டிச் சென்ற டிரைவர், அந்த பெண்ணை, 2 முறை தொடர்ச்சியாகக் கற்பழித்துவிட்டு, தப்பியோடினார்.

துரத்திவந்த உறவினர் இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, அருகில் உள்ள போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதுபற்றி அலிப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

A man allegedly raped a 24-year-old student from a northeastern state at south Delhi’s popular Deer Park around 2.30am on Sunday when she was returning home with a cousin after dinner at a restaurant in Hauz Khas Village.

அடுத்த செய்தி