ஆப்நகரம்

விநாயகரின் 25 கிலோ லட்டு திருட்டு; போலீசார் விசாரணை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செய்யப்பட்டிருந்த 25 கிலோ லட்டுவை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

TNN 10 Sep 2016, 4:03 pm
ஐதராபாத்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செய்யப்பட்டிருந்த 25 கிலோ லட்டுவை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
Samayam Tamil 25 kilo laddu stolen from ganesh pandal
விநாயகரின் 25 கிலோ லட்டு திருட்டு; போலீசார் விசாரணை


ஆந்திர மாநிலம் குஷைகுடா அருகே உள்ள ஏ.எஸ் ராவ் நகரில் ஸ்ரீநிவாச நகர் காலணி நலச்சங்கத்தினர் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடினர். இதற்காக பிரம்மாண்டமான விநாயகர் சிலையை வைத்து வழிபட்டனர். அதில் 25 கிலோ எடையுள்ள லட்டுவை சிலையின் கையில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று அருகிலுள்ள கடைக்காரர் ராகேஷ், விநாயகர் சிலையை கவனித்துள்ளார். அப்போது சிலையின் கையில் இருந்த 25 கிலோ எடையுள்ள லட்டு திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி