ஆப்நகரம்

கேன்சர் சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் மூன்றரை வயது சிறுவன்; கண்ணீருடன் ஏழைத் தந்தை!

ரத்த புற்றுநோயால் தவிக்கும் மூன்றரை வயது சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.

TNN 31 Dec 2017, 8:11 pm
மும்பை: ரத்த புற்றுநோயால் தவிக்கும் மூன்றரை வயது சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.
Samayam Tamil 3 5 year old son struggling for cancer treatment
கேன்சர் சிகிச்சைக்கு பணமின்றி தவிக்கும் மூன்றரை வயது சிறுவன்; கண்ணீருடன் ஏழைத் தந்தை!


மாதம் ரூ.8,000 வருவாயுடன் வேலை செய்து வரும் சேல்ஸ்மேன் சந்தேஷ் கதம். இவரது மூன்றரை வயது மகன் ஸ்ரீ.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, பூங்கா ஒன்றிற்கு சென்றிருந்த போது ஸ்ரீக்கு மூச்சு வாங்கி உடல் வெளிறிப் போனது. உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு ஸ்ரீக்கு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. ஏழைத் தொழிலாளியான சந்தேஷ், தன் மகனின் சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார்.

ஸ்ரீக்கு 6 மாதங்கள் கீமோதெரபி கொடுத்த புற்றுநோய் குணமாகும் என்றும், அதற்கு ரூ.12 லட்சம் செலவாகும் என்று தெரிவித்துள்ளனர்.

இதுவரை ரூ.90,000 வரை சேகரித்துள்ள அவர், பல்வேறு தொண்டு நிறுவனங்களிடமும், அரசிடமும் உதவிகோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறுவன் ஸ்ரீக்கு உதவி செய்பவர்கள் கெட்டோ(Ketto) மூலம் உதவி செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.5 year old son struggling for Cancer treatment.

அடுத்த செய்தி