ஆப்நகரம்

"காரில் தீப்பிடித்து மூவர் பலி": தற்கொலை என போலிஸ் விசாரணையில் தகவல்..!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கார் எரிந்து மூவர் பலியான சம்பவம் தற்கொலை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

TNN 1 Jun 2017, 8:11 am
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கார் எரிந்து மூவர் பலியான சம்பவம் தற்கொலை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil 3 commited sucide in car at chennai
"காரில் தீப்பிடித்து மூவர் பலி": தற்கொலை என போலிஸ் விசாரணையில் தகவல்..!


கடந்த சனிக்கிழமை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காலியிடத்தில் நின்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்தது. இந்த விபத்தில் காரில் இருந்த மூவர் பலியாகினர். காவல்துறை நடத்திய விசாரணையில்,பலியான மூவர் சென்னையில் ஆடிட்டராக பணிபுரியும் ஜெயதேவன், அவரது மனைவி ரமாதேவி, மகள் திவ்ய ஸ்ரீ என தெரிந்தது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் திவ்யஸ்ரீக்கும், பஞ்சாபில் ராணுவத்தில் பணிபுரியும் அவரது கணவர் சரத் ஆகியோருக்கு மனக்கசப்பு இருந்தது தெரியவந்தது.

திவ்யஸ்ரீ தனது கணவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்ததால், அவருக்கு அறிவுறை கூறுமாறு சரத் ஜெயதேவனிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து திவ்யஸ்ரீயை பஞ்சாபிற்கு சென்று ஜெயதேவன் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.

இதுமட்டுமல்லாமல் மாமனார் ஜெயதேவன் மீதும் தனது மனைவி திவ்யஸ்ரீ மீதும் சரத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஜெயதேவன் கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த ஜெயதேவன், கிழக்கு கடற்கரை சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தியுள்ளார். பின்னர் காரின் உள்பகுதியில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மூவரும் காரிலேயே எரிந்து பலியாகியுள்ளது காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

3 commited sucide in car at Chennai

அடுத்த செய்தி