ஆப்நகரம்

எதையும் கண்டு கொள்ளாத அரசு : சத்தீஸ்கரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 3 குழந்தைகள் பலி

உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து தற்பொழுது, சத்தீஸ்கரீல் 3 பச்சிளம் குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளது.

TNN 21 Aug 2017, 2:44 pm
ராய்பூர் : உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து தற்பொழுது, சத்தீஸ்கரீல் 3 பச்சிளம் குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளது.
Samayam Tamil 3 newborns die due to lack of oxygen in raipur hospital
எதையும் கண்டு கொள்ளாத அரசு : சத்தீஸ்கரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 3 குழந்தைகள் பலி


கடந்த வாரம் உத்தரப் பிரதேசம் மாநிலம் கோராக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 63 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது நாடுமுழுவதும் பலத்த அதிர்வை ஏற்படுத்தியது.

இதனால் பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனையின் இந்த அஜாக்ரதையான நிலை குறித்துகேள்வி எழுந்தது. இது இதுபோன்ற நிலை மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் அதே போன்ற ஆக்சிஜன் பற்றாக்குறையால் 3 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ராய்ப்பூரில் உள்ள பீமாராவ் அம்பேத்கார் நினைவு மருத்துவமனையில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதல்கட்ட விசாரணையில், ஆக்சிஜன் சிலிண்டர்களை கண்காணித்துவௌம் நபரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் ராமன் சிங் ஆணையிட்டுள்ளார்.

ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து 70க்கும் மேற்பட்ட இறந்த நிலையில், அரசு விழித்துக்கொள்ளும் என நினைத்த நிலையில் மீண்டும் இதே நிலை நீடிப்பது வருத்தத்திற்குரியது.

Three newborns receiving treatment in a hospital in Chhattisgarh's Raipur died on Monday allegedly due to lack of oxygen pressure.

அடுத்த செய்தி