ஆப்நகரம்

வெட்டவெளியில் ஆபாசமாக குளித்த சகோதரர்களை படம் எடுத்தவர் குத்திக்கொலை!!

வெட்டவெளியில் குளித்த மூன்று சகோதரர்களை புகைப்படம் எடுத்த வாலிபரை, மூன்று சகோதரர்களும் சேர்ந்து கத்தியால் குத்திக் கொன்றனர்.

TNN 21 Aug 2017, 4:33 pm
வெட்டவெளியில் குளித்த மூன்று சகோதரர்களை புகைப்படம் எடுத்த வாலிபரை, மூன்று சகோதரர்களும் சேர்ந்து கத்தியால் குத்திக் கொன்றனர்.
Samayam Tamil 3 stab man for filming them bathing in open
வெட்டவெளியில் ஆபாசமாக குளித்த சகோதரர்களை படம் எடுத்தவர் குத்திக்கொலை!!


டெல்லியின் தென்கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சூரஜ். இவர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது குடியிருப்பின் மாடியில் நீரஜ்ஜூம் , அவரது இரண்டு சகோதரர்களும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வீட்டின் மாடியில் நின்று குளித்துக்கொண்டிருந்த மூவரையும் சூரஜ் தனது மொபையில் புகைப்படம் எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் அவரை கத்தியால் குத்தியுள்ளனர்.

இந்த மூவரும் அடிக்கடி உடை இல்லாமல் குளிப்பது, ஆபாசமாக செய்கைகள் செய்வது என்று சேட்டைகள் செய்து வந்தனர். இவ்வாறு நடந்து கொள்வதை சூரஜ் அடிக்கடி கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை .

இவர்களுக்கு நல்ல பாடம் கற்றுக்கொடுக்க அவர்கள் குளிப்பதை படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த அவமானத்தை தாங்கிக்கொள்ளாமல் மூவரும் அவரை கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர். மூவரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.


3 stab man for filming them bathing in open

அடுத்த செய்தி