ஆப்நகரம்

சென்னை: 3 வயது குழந்தை மர்மமான முறையில் மரணம்!

சென்னை வில்லிவாக்கத்தில் நேற்று இரவு காணாமல் போன 3 வயது குழந்தை, குப்பை மேட்டில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 8 Nov 2017, 9:37 pm
சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் நேற்று இரவு காணாமல் போன 3 வயது குழந்தை, குப்பை மேட்டில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 3 year old girl in chennai villivakkam found dead in garbage
சென்னை: 3 வயது குழந்தை மர்மமான முறையில் மரணம்!


சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசன்-ஜெயந்தி தம்பதியரின் 3 வயது குழந்தை காவ்யா. நேற்று மாலை மழை பெய்த போது, குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வெளியே கடைக்குச் சென்றுள்ளார் ஜெயந்தி. கடைக்குச் சென்றுவிட்டு வந்து பார்த்த போது குழந்தை வீட்டில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து, குழந்தையின் உறவினர்கள் வீட்டின் அருகில் தேடி பார்த்துள்ளனர். அப்போது குழந்தை கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், இன்று காலை வீட்டின் பின்புறத்திலிருந்த குப்பை மேட்டில் குழந்தை காவ்யா வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்துள்ளார். குழந்தையின் உடலை மீட்ட போலீஸார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பக்கத்து வீட்டு பெண்ணை போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

3 Year old girl in Chennai villivakkam found dead in garbage.

அடுத்த செய்தி