ஆப்நகரம்

குறி சொல்வது போல் நடித்த 4 பேர் கைது!

சேலத்தில் குறி சொல்வது போல் நடித்த 4 பேரை, குழந்தை கடத்தல் கும்பல் என்று பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Samayam Tamil 26 May 2018, 11:17 pm
சேலத்தில் குறி சொல்வது போல் நடித்த 4 பேரை, குழந்தை கடத்தல் கும்பல் என்று பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Samayam Tamil teacher arrested


சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தேவியாகுறிச்சி கிராமத்தில் நேற்று இஸ்லாமியர்கள் 4 பேர் வீடுவீடாக ஜோசியம் பார்க்க வந்துள்ளனர். அப்போது அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட, குழந்தை கடத்தல் கும்பல் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தனர். இதையடுத்து அவர்களை பிடித்து கட்டிவைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், 4 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் நால்வரும் திருவண்ணாமலை மற்றும் கடலூரைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களது பெயர் பிரசாத் பச்சையப்பன், கோபி, ரவி ,என்பதும் தெரியவந்தது. மேலும், வயிற்றுப் பிழைப்புக்காக இஸ்லாமிய வேடம் அணிந்து கொண்டு வீடு வீடாக சென்று குறி சொல்லி வருவதாகவும் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி