ஆப்நகரம்

மூச்சுக்குழாயில் மாட்டிக்கொண்ட பொம்மையால் 4 வயது சிறுவன் பலி

மூச்சிக்குழாயில் பொம்மை சிக்கியதால் 4 வயது குழந்தை இறந்த சம்பவம் மும்பயில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 3 Oct 2017, 12:41 pm
மூச்சிக்குழாயில் பொம்மை சிக்கியதால் 4 வயது குழந்தை இறந்த சம்பவம் மும்பயில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 4 year dead due to doll got chocked in air pipe
மூச்சுக்குழாயில் மாட்டிக்கொண்ட பொம்மையால் 4 வயது சிறுவன் பலி


நவராத்திரி விழாவை பிர்ஜூ தனது குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றிருந்தார். இந்தநிலையில் வீடு திரும்பும்போது பிர்ஜூ மகன் பியூசுக்கு சிப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கி கொடுத்தார். அந்த சிப்ஸ் பாக்கெட்டிற்குள் சிறிய பொம்மை ஒன்று இருக்கும்.

வீட்டிற்கு வந்தவுடன் சிறுவன் அந்த பொம்மையை வைத்து விளையாடி கொண்டு இருந்தான். அப்போது அந்த பொம்மையை விளையட்டுப்போக்கில் வாயில் போட்டுவிட்டான். இதனால் அவனுக்கு பேச கூட முடியவில்லை .
பியூசை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிக்கிச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவனது மூச்சுக்குழாயில் பொம்மை சிக்கியிருப்பதை கண்டுபிடித்தனர். எனவே அவர்கள் உடனடியாக சிறுவனை சதாப்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறித்தனர்.

ஆனால் அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் உயிரிழந்துவிட்டதாக கூறினர். சிறுவனின் மூச்சு குழாயில் பொம்மை சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவன் உயிரிழந்தது தெரியவந்தது. இதுபோன்று மூச்சு குழாயில் முற்றிலும் அடைப்பு ஏற்படும் போது 5 முதல் 10 நிமிடங்களுக்குள் மருத்துவ சிகிச்சை அளித்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறினார்.

4 year dead due to doll got chocked in air pipe

அடுத்த செய்தி