ஆப்நகரம்

ஒரு கோடியை விழுங்கிய அட்டகாச புலி சுட்டுக் கொலை

40 நாட்களாக ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து, தேடப்பட்டு வந்த புலி வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது.

TNN 21 Oct 2016, 3:01 pm
நைனிடால்: 40 நாட்களாக ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து, தேடப்பட்டு வந்த புலி வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது.
Samayam Tamil 40 days and rs 1 crore later man eating tigress killed
ஒரு கோடியை விழுங்கிய அட்டகாச புலி சுட்டுக் கொலை


உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகர் அருகே புலி ஒன்று ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்துள்ளது. புலி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கிராமமக்கள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, வீட்டை விட்டு யாரும் வெளியே வருவதில்லை.

பள்ளி குழந்தைகளும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். இதையடுத்து வனத்துறை மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்காக மூன்று யானைகளில் வேட்டைகாரர்கள், 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், மோப்ப நாய்கள், ட்ரோன்கள், ஹெலிகாப்டர், 150 பேர் கொண்ட குழு, 5 துப்பாக்கியாளர்கள் தீவிரமாக தேடினர்.

இந்த பணியில் வனத்துறை அதிகாரி பரக் மதுகர் தகதே தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை புலியை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து புலியின் தலை, வயிறு, தாடை ஆகிய பகுதிகளில் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதனையறிந்த மக்கள் உடனடியாக புலி இறந்த கிடந்த இடத்திற்கு சென்று, அதனை தூக்கி கொண்டு ஊர்வலமாக சென்றனர். 40 நாட்களாக ரூ.1 கோடி செலவு செய்து, தேடப்பட்டு வந்த புலி வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bringing to an end a search that lasted over 40 days and involved expenses of nearly Rs 1 crore, the elusive maneating tigress who was stalking the area near Ramnagar was finally shot dead by a forest department shooter in Gorakhpur village on Thursday.

அடுத்த செய்தி