ஆப்நகரம்

ஹாஸ்டல் உணவு சாப்பிட்ட கல்லூரி பெண்கள்; 48 பேருக்கு உடல்நலப் பாதிப்பு...!

ஹாஸ்டல் உணவு சாப்பிட்ட கல்லூரி பெண்கள் 48 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

TNN 24 Jul 2017, 12:43 pm
சென்னை: ஹாஸ்டல் உணவு சாப்பிட்ட கல்லூரி பெண்கள் 48 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil 48 students of chennai womens college fall ill
ஹாஸ்டல் உணவு சாப்பிட்ட கல்லூரி பெண்கள்; 48 பேருக்கு உடல்நலப் பாதிப்பு...!


சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு உணவாக இட்லி சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து 4 பேருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவிகள் நலமடைந்தனர். இந்நிலையில் உணவில் பல்லி இறந்து கிடந்ததாக மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எழுந்த புகாரை அடுத்து, சென்னை மாநகராட்சியின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விடுதியில் ஆய்வு செய்தனர். அவர்கள் உணவு மாதிரிகளை எடுத்துச் சென்றனர்.

48 students of Chennai women's college fall ill after having dinner at hostel.

அடுத்த செய்தி