ஆப்நகரம்

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஆண்டுதோறும் 6 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பெண்குழந்தைகள் அதிகளவில் உயிரிழப்பதாக யுனிசெஃப் நிறுவனம் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Feb 2018, 7:30 pm
இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பெண்குழந்தைகள் அதிகளவில் உயிரிழப்பதாக யுனிசெஃப் நிறுவனம் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 6 lack children were died in india they affected by malnutrition
இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஆண்டுதோறும் 6 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு!


குழந்தைகள் நல ஆணையமான யுனிசெஃப் நிறுவனம் உலகளவில் குழந்தைகளிடையே நிலவி வரும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஆய்வை மேற்கொண்டது. அதில் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பெண்குழந்தைகள் அதிகளவில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனிசெஃப் நிறுவன ஆய்வின் முடிவில், உலக அளவில் குழந்தைகள் இறப்பில் இந்தியா 4ல் ஒரு பங்காக இருப்பதாகவும், இந்தியாவில் ஆண்டு தோறும் 6 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மரணமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிக அளவில் உயிரிழப்பதாக யுனிசெஃப் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும், சிகிச்சைக்கும் பெற்றோர் முக்கியத்துவம் அளிக்காததால் 5 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் அதிக அளவில் உயிரிழப்பதாக யுனிசெஃப் நிறுவன ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி